articles

img

இந்துத்துவாவின் பல முகங்கள் பதுங்கிப் பாய்வதைப் பாரீர்!

ஆ ர்எஸ்எஸ்- பாஜக தலைமையிலான இந்துத்துவா அதிதீவிர வலதுசாரி சக்தி களின் உண்மை முகம் என்பது இந்திய பெரு முதலாளித்துவ- நிலப் பிரபுத்துவ அமைப்பின் கொடிய சுரண்டல் முகமே தவிர வேறு அல்ல. ஆனால் நேரத்திற்கு ஏற்றவாறு, தேவைக்கு ஏற்றவாறு இந்த சக்திகள் தனது உருவத்தையும், முகத்தோற்றத்தை யும் மாற்றிக் கொள்ளும். எனவே இந்துத்துவா வலது சாரி சக்திகளின் பரவலையும், வளர்ச்சியையும் மிக நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது; அதன் விதவித மான சூழ்ச்சிகளையும், சதிராட்டங்களையும் புரிந்து கொண்டு அதன் வேர்களில் வெந்நீர் ஊற்ற திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.

இந்துத்துவா வலதுசாரி இயக்கமானது, நமது நாட்டில் பல்வேறு விதமான சமூகக் கிளர்ச்சி சக்தி களை தன்வசம் இழுக்கும் தன்மை கொண்டது. பன்முக, மதச்சார்பற்ற, ஜனநாயகப் பண்புகளை அழித்து இந்து தேசியவாத பிற்போக்கு ஆட்சியை முழுமையாக நிறுவுவதற்கு தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 

மதவெறியும் கார்ப்பரேட்டும் கள்ளக்கூட்டு

அதன் ஒரு பகுதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைத் தகர்ப்பது; அதன்மூலம்  ஒட்டுமொத்த நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்டம் இயற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றங்கள், ஊடகங்கள், அனைத்து விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, ஒட்டு மொத்த பாது காப்புப் படைகள் உள்ளிட்ட அனைத்து அரசியல மைப்புச் சட்ட நிறுவனங்களையும் தன்வசப்படுத்து வது; மதவெறிமயமாக்குவது என்பதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

இதன் மற்றொரு பகுதியாக, பெரும் முதலா ளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கொடிய சுரண்டலின் - சமூக ஒடுக்குமுறையின் பிடியில் தாக்குண்டு கிடக்கும் ஏழை, எளிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை வேறு வேறு முகங்களுடன் வந்து அரவணைப்பது போல ஈர்த்துக் கொள்வது; அதே வேளையில் இந்த கொடிய சுரண்டலுக்கு காரணமான பெரும் முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் நிலப் பிரபுக்களின் நலன்களை காப்பதற்காக எந்த எல்லைக் கும் செல்வது என்பதில் இந்துத்துவா வலதுசாரி இயக்கம் மிக உறுதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 

எனவே பெரு முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டங்களை இன்னும் வலுவான முறையில் தீவி ரப்படுத்தாமல் அதற்கு சேவை செய்து கொண்டிருக்கிற மதவாதத்தை தனிமைப்படுத்த முடியாது; அதே நேரத்தில் மதவாதத்திற்கு எதிராக அந்த சக்திகளை தனிமைப்படுத்தும் வலுவான போராட்டங்களை நடத்தாமல் இன்றைய இந்திய பெரு முதலாளித்து வத்தை எதிர்க்க முடியாது. இந்த இரண்டும் ஒன்றோ டொன்று தொடர்புடைய, ஒன்றுக்கொன்று உதவி செய்கிற போராட்டங்கள். 

நெருக்கடியின் ஆழத்தில் பொருளாதாரம்

ஒன்பது ஆண்டுக் காலமாக மோடி தலைமையி லான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. நெருக்கடியின் ஆழத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் முற்றிலும் தவறான கொள்கைகளால் உள்நாட்டுத் தொழில்கள் அனைத்தும் சீர்குலைந்துள்ளன. சிறு, குறு தொழில் கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து ஏழாண்டுகள் நிறைவடைந் துள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவிலிருந்து இன்னும் இந்திய மக்கள் மீள வில்லை. விவசாயம், தொழில்கள், இயற்கை வளங்கள் என அனைத்தும் முதலாளிகளின் நலன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு, நடுத்தர விவ சாயிகள், தொழில் முனைவோர், சுய தொழில் செய்வோர் என எவரது நலன்கள் குறித்தும் மோடி அரசு கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.

மோடி ஆட்சியில் பொருளாதார நெருக்கடி தீவிர மடைந்து, கடந்த 18 மாதங்களில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையின் எட்டு பிரதான துறைகளில் 8 சதவீதம் உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் சக்தி மிகப் பெரும் வீழ்ச்சியில் சிக்கியுள்ளது. இதுபற்றி 2023 அக்டோபர் 27-29 தேதிகளில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, வெளியிட்டுள்ள விரிவான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன:  

வாங்கும் சக்தி கடும் வீழ்ச்சி

“மோடி அரசின் கூட்டுக் களவாணி முதலாளிக ளுக்கு நாட்டின் பெருவாரியான செல்வம் மடை மாற்றி விடப்பட்டுள்ளது. மிகப் பெரும் பணக்காரர்க ளாக உள்ள வெறும் ஒரு சதவீதம் பேரின் உண்மை வருமானம் இந்த காலகட்டத்தில் 30 சதவீதம் அதி கரித்துள்ளது. அதாவது 2019இல் ரூ.7.9 லட்சம் கோடி யாக இருந்தது, 2022இல் ரூ.10.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அடிமட்டத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களாக உள்ள 25 சதவீதம் பேரின் உண்மை வருமானம் 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது 2019இல் ரூ.3.8 லட்சம் கோடியாக இருந்தது. 2022இல் ரூ.3.4 லட்சம் கோடி யாக வீழ்ந்துள்ளது. 

இதன் விளைவாக பெருவாரியான மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக வீழ்ச்சியடைந்து, உற்பத்தி பொருட்களுக்கான கிராக்கியும் வீழ்ச்சியடைந்து, அதன் தொடர் விளைவாக பொருளாதார வீழ்ச்சி தீவிர மடைந்துள்ளது; உற்பத்தி வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொருள் உற்பத்தித் துறையின் பங்கு 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது 16.4சதவீதம் என்ற அளவிலேயே தேங்கி நிற்கிறது. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பின் எண்ணிக்கை 2011-12இல் 12.6 சதவீதமாக இருந்தது, 2021-22 இல் 11.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இத்தகைய வீழ்ச்சியும், ஏற்கெனவே கிராமப்புறங்க ளில் விவசாயம் நிலைகுலைந்துள்ள சூழ்நிலைமை யும் சேர்ந்து ஏழை, எளிய மக்களின் கடைசிப் புகலி டமாக உள்ள கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வேலை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் போய் முடிந்துள்ளது. கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வேலை கேட்டு பதிந்தவர்களின் எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 

45 சதவீதம் வேலையின்மை

அதே போல இளைஞர்களிடையே வேலையின்மை மோடி ஆட்சியின் காலத்தைப் போல எந்தக் காலத்தி லும் அதிகரித்ததில்லை. 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை 23.22 சதவீத மாக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பட்டதாரிகளி டையே வேலையின்மை, எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு 45 சதவீதத்தை எட்டியுள்ளது. 

30 சதவீதம் விலைவாசி உயர்வு

அதேபோல விலைவாசி உயர்வு கட்டுப்பாடின்றி விண்ணில் பறக்கிறது. 2014 மே மாதத்தில் ஒப்பிடும் போது 2023 மே மாதத்தில் ஒட்டுமொத்த விலை உயர்வின் சராசரி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கோதுமை விலை 53 சதவீதம், அரிசி விலை 43 சத வீதம், பருப்பு வகைகளின்  விலை 56 சதவீதம், காய்கறி கள், பழங்களின் விலை 43 சதவீதம், பால் விலை 2 சத வீதம், முட்டை விலை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. 

பெட்ரோலியப் பொருட்களின் இடைவிடாத விலை உயர்வின் மூலமாக ஒட்டுமொத்த மக்களையும் மோடி அரசு பகிரங்கமாக கொள்ளையடித்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள் மூலம் ஒன்றிய அரசு மக்களிடமிருந்து உறிஞ்சி எடுத்த தொகை 2014- 15இல் ரூ.1.26 லட்சம் கோடியாக இருந் தது. 2021-22இல் ரூ.4.32 லட்சம் கோடியாக அதி கரித்துள்ளது. இது 243 சதவீதம் உயர்வு என்பது, இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட எத்தனை பெரிய தாக்கு தல் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் கடும் பாதிப்பு

தமிழ்நாட்டில் இதன் விளைவுகள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் ஜவு ளித்துறை, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கோயம் புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மையங்களில் உற்பத்தித்  திறன் அபரிமிதமாக இருந்தும் கூட மோடி அரசின் வரை முறையற்ற இறக்குமதி கொள்கைகளின் பாதகமான தாக்கங்கள், ஜவுளி உற்பத்தி துறையின் மீதும் அதன் சார் நிறுவனங்கள், உப தொழில்கள் மீதும்; கிட்டத்தட்ட அனைத்துத் தொழில்கள் மீதும் எண்ணிப் பார்க்க முடியாத கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்துத்துவாவின் பல முகங்கள்

இத்தகைய பொருளாதாரத் தாக்குதல்களை எதிர்த்து மக்களின் - தொழிலாளர்களின் போராட்ட அலை எழுகிறது; அதிலிருந்து திசை திருப்புவதற்காக இந்துத்துவா வலதுசாரி இயக்கம் தனது வேறு பல முகங்களை மக்கள் முன் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு முகம்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமிப்பு செய்வது, அபகரிப்பது. அந்த வேலையைச் செய்வதற்கு ஏவப் பட்டுள்ள பல்வேறு வடிவங்களில் ஒன்றுதான் ஆளு நர்கள் மூலமாக எதிர்க்கட்சி மாநிலங்களின் அரசாங் கங்களையும், அதன் திட்டங்களையும் சீர்குலைப்பது; அதன் மூலமாக அந்த மாநில மக்களை நிலை குலையச் செய்வது; அங்கு ஆளும் அரசுகளுக்கு எதிராக கலகம் செய்வது. அதைத்தான் இப்போது தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பார்த்து வருகிறோம். 

இதுவரையிலும் இந்திய அரசியலில் நடக்காத ஒரு புதுவிதமான தாக்குதல். இதுதான் பாசிசத்தின் குணம். இடத்திற்கு ஏற்றவாறு, நேரத்திற்கு ஏற்றவாறு இந்தத் தாக்குதலின் அணுகுமுறை மாறுகிறது. ஆனால் அதன் இலக்கு ஒன்றுதான். அசாமில் மேற்கொள்ளும் பேரம் பேசும் அணுகுமுறையை கேரளாவிற்கு பொருத்த முடியாது; எனவே கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசிற்கு எதிராக கொடூரமான சூழ்ச்சிகள் செய்வது. தமிழ்நாட்டிற்கு வரும்போது இந்துத்துவா வலதுசாரி களின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இங்கு தமிழ் மொழி, இனம் ஆகிய அம்சங் களை முன்னிறுத்தி அதைச் சுற்றியே இடைவிடாமல் சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் எழுப்புவது. இங்கு மதவெறிக்கு எதிராக முழங்கிய மகத்தான ஆளுமைகளை எல்லாம் தங்களது அடையாளங்க ளாக மாற்றிக் கொள்வதில் முனைப்பாக ஈடுபட்டுள் ளனர். குறிப்பாக மகாகவி பாரதி, வள்ளலார், அம்பேத் கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோ ரை தங்களது தலைவர்களாக அபகரித்துக் கொள்ள முனைவது; அதன் மூலம் பெரியாரை, மார்க்சை தனி மைப்படுத்துவது, திட்டமிட்டு பெரியார் எதிர்ப்பை - பெரியாரின் சிந்தனைகள் மீதான எதிர்ப்பை; மார்க்சிய எதிர்ப்பைக் கட்டமைப்பது. இதை ஓர் அரசியல் திட்டமாக தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக அம லாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான முகம்தான் ஆளுநர் ரவியும் அவரது அத்துமீறல்களும். 

ஆளுநரின் அத்துமீறல்கள்

இதுவரை தமிழ்நாட்டில் 25 ஆளுநர்கள் இருந் துள்ளனர். இவர் 26ஆவது நபர். இவருக்கு முன் இருந்த வர்கள் ஒருவர் கூட அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய தில்லை. ஆனால் தற்போதைய ஆளுநர் ரவி, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின்- மாநில முதல்வரின் நிர்வாக அதிகாரங்களை தன் கைகளில் எடுத்துக் கொள்கிறார்; மாநில அரசாங்கத்தையும், அமைச்சரவையையும் அதிகாரம் இல்லாத பார்வையா ளர்களாக மாற்றப் பார்க்கிறார். 

பல்கலைக்கழக வேந்தர் என்பதைப் பயன்படுத்தி, தமிழகக் கல்வியை, கல்லூரிகளின் செயல்பாட்டை முடக்கப்  பார்க்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோ தாக்களை துச்சமாக கருதுகிறார். அவரது  செயல்கள் எதுவும் அறியாமல் செய்வதல்ல; அரசியல் சட்டம் புரியாமல் செய்வது அல்ல. தெரிந்தே, ஆர்எஸ்எஸ் ஊழியராக, இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை, அரசியல் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய ஆளுநர் பதவி என்ற அதி காரத்தை பயன்படுத்தி அமலாக்குகிறார். முற்றிலும் மாறுபட்ட தமிழ் மரபை, தமிழ்க் கலாச்சாரத்தை பிராம ணிய மரபாக, இந்துத்துவாக் கலாச்சாரமாக நிறுவுவ தற்கு அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்த பண்பாடு இருப்பதை இந்த சக்திகள் புரிந்து வைத்துள்ளனர். அதன்படியே தமிழ்நாட்டிற்கு ஏற்ற நிலைபாட்டை மேற்கொள்கிறார்கள். இங்குள்ள ஆதீனங்களுக்கு சிறப்பு செய்கிறார்கள். செங்கோலை முன்வைத்து தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித பெருமித உணர்வை மதரீதியாக உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆதீனங்க ளுக்கு மரியாதை செலுத்துவது என்பதன் பின்னணி யில் தமிழ்நாட்டில் பெருவாரியாக உள்ள சைவ சமயம் சார்ந்த மரபுப் பிடிமானங்களில் இருப்பவர்களின் மரியா தையைப் பெறுவது என்ற நோக்கம் இருக்கிறது.

தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் இனத்தை போற்றுவதா கக் கூறிக் கொண்டே, அதே தமிழையும், தமிழர்க ளின் பண்பாட்டையும் அழிக்கும் விதமாக இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட நடவடிக்கை களை இந்துத்துவா வலதுசாரி ஆட்சியும், அமைப்புக ளும் செய்கின்றன. இது இவர்களின் மற்றொரு முகம். 

நெறிகளை அழித்தல்

இஸ்லாமிய ஒழிப்பு, கிறிஸ்தவ ஒழிப்பு, கம்யூனிச ஒழிப்பு ஆகிய மூன்றும் மேற்கண்ட இந்துத்துவா வலது சாரி சக்திகளின் அடிப்படையான நிகழ்ச்சி நிரல். அதை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக செயல் படுத்துகிறார்கள். இந்த மூன்றும் பெரும் முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் நிலப் பிரபுக்களுக்கு தேவைப்படுகிறது. இந்தியாவில் மக்கள் ஒற்றுமை, மனிதநேயம், மதச்சார்பின்மை என்பவை சமூக வாழ்வின் அடிநாதமாக இருக்கக்கூடிய ஒன்று. இது எல்லா அநீதிகளுக்கு எதிராக, அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த உதவுகிறது. அந்த ஒற்றுமை பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட்டு களின் லாபவேட்டைக்கு, மூலதனக் குவிப்புக்கு எதிரா னதாக உள்ளது. எனவே அந்த ஒற்றுமையை உடைப் பது பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு அவசியமானது. அந்த காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றுகிறது இந்துத்துவா வலதுசாரி இயக்கம். இது ஒரு சூழ்ச்சி முகம். 

இந்துத்துவா என்பது நெறியின்மை. நெறியின்மை என்பதே அதன் நெறி. இது எல்லா பாசிச இயக்கங்க ளுக்கும் பொருந்தும். இந்த நெறியின்மையை இந்தி யாவில் இன்று பெரு முதலாளிகள் ஆதரிக்கிறார்கள். முதலாளித்துவ, நிலபிரபுத்துவ அமைப்பில், அதற்கு தலைமை தாங்கக்கூடிய சக்திகள் மதவாத அரசியலை ஆதரிக்கிறார்கள் என்றால் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

முதன்மை போராட்டம்

எனவே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் இந்துத்துவா அரசியலை எதிர்ப்பது, வீழ்த்துவது என்பது பெரு முதலாளித்துவ, கார்ப்பரேட், நில பிரபுத்துவ அமைப்பு  முறையின் கொடிய சுரண்டலுக்கு எதிரான மாபெரும் வர்க்கப் போராட்டத்தின் தற்போதைய முதன்மையான போராட்டம் ஆகும்.